பிளாஸ்டிக் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

74பார்த்தது
பிளாஸ்டிக் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஜேப்பியார் கல்லுாரியில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து, பிளாஸ்டிக் பாதிப்பு குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அடுத்த, குண்ணம் பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சிச் கல்லுாரியான ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லுாரியில், 'டோன் ஆட்டோ பார்ட்ஸ்' நிறுவனம் இணைந்து, டிரைன் தி டிரைனர்' எனும் பிளாஸ்டிக் உபயோகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், ஜேப்பியார் கல்லுாரியின் நிர்வாக இயக்குனர் மரியா, கல்லுாரி டீன் மதுசூதனர் தலைமை தாங்கினர்.

'டோன் ஆட்டோ பார்ட்ஸ் நிறுவனதின் மூத்த மேலாளர் பெனடிக்ட் ஆனந்த், பிளாஸ்டிக் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது குறித்து, நாட்டு நலப்பணி திட்டத்தைச் சேர்ந்த தன்னார்வல மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி