ஓசியில் மது கேட்டு பாரை சூறையாடிய கும்பல் (வீடியோ)

53பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான பாரில் வாங்கிய மதுவுக்கும் பணம் கொடுக்க முடியாது என 4 பேர் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர் பாரை அடித்து நொறுக்கி சூறையாடினர். அப்போது அங்கு அமைதியாக அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தவர்களின் மேஜையை இழுத்துப்போட்டு உடைத்தனர். இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியிலும் கீழே விழுந்து உடையாமல் இருந்த மதுபாட்டிலை எடுத்துக் கொண்டு நபர் ஒருவர் அங்கிருந்து சென்றார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி: பாலிமர் நியூஸ்