திருமணம் செய்து வைக்கக்கோரி சண்டை: இளைஞர் பலி

85பார்த்தது
திருமணம் செய்து வைக்கக்கோரி சண்டை: இளைஞர் பலி
விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் மொட்டைச்சாமி (25). இவர் மது அருந்திவிட்டு தனக்கு திருமணம் முடித்து வைக்கக் கோரி கடந்த 11ஆம் தேதி தனது தாய் சீதாலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மது போதையில் தாயுடன் சண்டையிட்ட அவர் எறும்பு சாக்பீசை கடித்ததாகவும் கூறப்படுகிறது. அதை அவருடைய தாய் தட்டி விட்டதை அடுத்து வீட்டின் சமையலறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சீதாலட்சுமி மகனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிபடுத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.