உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டை, அருள்மிகு திருவேங்கடநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலப்பரப்பில் பாரத ஸ்டேட் வங்கியின் பெருநிறுவன சமுதாய பொறுப்பு நிதியின் மூலம் மரக்கன்று நடும் நிகழ்வினை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன். , திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சுகுமார், பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார், மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை பொது மேலாளர் பர்மிந்தர் சிங், பொது மேலாளர் ஸ்ரீநிவாச ராவ், இணை ஆணையர்கள் கார்த்திக், மாரிமுத்து, கிராமியம் டிரஸ்ட் நாராயணன், கூடு டிரஸ்ட் ஜெயதீசன் மற்றும் அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.