விருதுகள் பெற்ற மகளிர் சுய உதவி குழுவினர்

79பார்த்தது
விருதுகள் பெற்ற மகளிர் சுய உதவி குழுவினர்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம், மாநில அளவிலான விருதுகள் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(03. 10. 2024) மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

அதில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாரத்தைச் சேர்ந்த கண்ணகி சுயஉதவிக்குழு, குஜிலியம்பாறை வட்டாரத்தைச் சேர்ந்த பாரதமாதா குழு, திண்டுக்கல் மாநகராட்சியைச் சேர்ந்த அட்சயா மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் சந்தியா மகளிர் சுயஉதவிக்குழு என 4 குழுவினர் மணிமேகலை விருதுகள் மற்றும் தலா ரூ. 1. 00 இலட்சம் பரிசுத்தொகை பெற்றனர்.

இந்த சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி இன்று(03. 10. 2024) நேரில் சந்தித்து விருது மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு. சதீஸ்பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி