சின்னாளபட்டி: காவல்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

55பார்த்தது
சின்னாளபட்டி: காவல்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு
சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் காவல்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து கார், பைக், மற்றும் வேன்களில் குட்கா, கஞ்சா, போன்ற போதைப்பொருட்களை கடத்துவது குறித்து விசாரணை செய்தனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிரடியாக வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். சின்னாளபட்டி பைபாஸ் சாலையில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் ஈஸ்வரன், பிரகாஷ், தலைமை காவலர்கள் ராமச்சந்திரன், ஜான் பெர்னான்டஸ் ஆகியோர் சின்னாளபட்டி பைபாஸ் சாலை வழியாக திண்டுக்கல் செல்லும் வாகனங்களையும், திண்டுக்கல்லிலிருந்து பைபாஸ் வழியாக சின்னாளபட்டி ஊருக்குள் செல்லும் வாகனங்களையும் அதிரடியாக சோதனை செய்தனர்.

வாகன உரிமையாளர்களிடமிருந்து முறையான லைசென்ஸ், ஆர். சி. புக், இன்சூரன்ஸ் செலுத்தியுள்ளனரா என்பதை சோதனை செய்த பின்பு அனுப்பி வைத்தனர். இதுபோல இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதித்ததோடு அவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா என்பதை பார்வையிட்டு அனுப்பி வைத்தனர். அப்போது அவ்வழியே வந்த பள்ளி வாகனம் மற்றும் எம்சான்ட் மண் ஏற்றி வந்த லாரியை மடக்கி இதுபோல முறைகேடாக புறவழிச்சாலைக்குள் வரக்கூடாது என்றும் மீறி வந்து விபத்து ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்து அனுப்பினார்கள்.

தொடர்புடைய செய்தி