பண்ருட்டி: மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது

58பார்த்தது
பண்ருட்டி: மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர், எனதிரிமங்கலம் பகுதியில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சிறுவத்தூர் பகுதியில் முருகன் மனைவி மல்லிகா என்பவர் வீட்டில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதேபோல என திரிமங்கலம் பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்ததாக ராஜகோபால் மகன் பட்டு என்ற பத்மநாபன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி