நெய்வேலி: இருசக்கர வாகனம் திருடியவர் கைது

52பார்த்தது
நெய்வேலி: இருசக்கர வாகனம் திருடியவர் கைது
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் எம். ஜி. ஆர். , நகரை சேர்ந்த மாதேஷ் இவர் கடந்த 1 ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று(அக்.3) முன்தினம் கடைவீதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காணாமல் போன மாதேஷ் இருசக்கர வாகனம் என தெரியவந்தது. பின்னர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர் திருவெண்ணுநல்லூர் சரவணபாக்கம் கிராமத்தை சேர்ந்த உதயா என்பதும் மாதேஷ் இருசக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து உதயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி