கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த 5 உண்டியல்கள் நேற்று (அக்.,8) இந்து சமய அறநிலையத்துறை கடலூர் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் செயல் அலுவலர் (பொறுப்பு) சிவகுமார், சிதம்பரம் சரக ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூபாய் 12 லட்சத்து 53 ஆயிரத்து 603 மற்றும் 28 கிராம் தங்கம், 160 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.