கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, சிதம்பரம், கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி தொகுதிகளில் உள்ள 2, 604 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் காலாண்டு விடுமுறைக்கு பின்னர் நேற்று (அக்.,7) திறக்கப்பட்டன.
முன்னதாக பள்ளிகள் திறப்பதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இது மட்டும் இல்லாமல் நேற்று பள்ளி திறக்கப்பட்டதால் பள்ளியில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டது.