கோவை சிங்காநல்லூர் வேலவன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி, இவரின் மகன் குமரவேல் (69). தோட்ட
வேலை செய்து வந்தார். இவர்
வேலை செய்யும் தோட்டத்திலேயே மனைவியுடன் தங்கி இருந்து பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரின் குடிப்பழக்கத்தால் இவருடைய 4 மகன்களும் இவருடன் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.
இதனால் மனமடைந்த இவர் சம்பவத்தன்று வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த மனைவிக்கு தெரியாமல் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்து வந்து பார்க்கும் போது அதிர்ச்சி அடைந்த இவருடைய மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.