கோவை மாநகர மாவட்ட தலைவர் பதவியேற்பு விழாவில் நேற்று கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, திருப்பரங்குன்றம் மலையை, திட்டமிட்டு அங்கு மத மோதலை உருவாக்குவதற்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சிறுபான்மை மக்களை தூண்டுகிற வகையில் இன்று அந்தப் பகுதியில் மிகப்பெரிய பதற்றத்தை, தமிழக அரசாங்கமே ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.
திருப்பரங்குன்றம் என்றாலே மலை, புனிதமான மலை, முருகப்பெருமான் அருள் பாலிக்கின்ற அந்த மலையிலே, இடையிலே ஏற்பட்ட ஒரு வரலாற்றின் காரணமாக, சிறுபான்மை மக்கள் அந்த மலையை அவர்களுக்கு சொந்தமான மலை என்று கொண்டாடுகிறது. திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருந்த, இந்து முன்னணியின் போராட்டத்திற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். அங்கு அமர்ந்து அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கும், அங்கு இருக்கிற மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர் குகைகள், பச்சை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு உள்ளது,
முற்றிலுமாக அதனுடைய தன்மையை மாற்ற முயற்சிக்கும் நபர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல், இந்துக்களுடைய உணர்வுகளை பாதுகாக்கும் வகையில் போராட்டம் நடத்துகிற இந்து முன்னணி போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது, முற்றிலும் ஜனநாயக விரோதமானது. இதற்கு கடுமையான எங்களுடைய கண்டனங்களை பதிவு செய்கிறேன்.