தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை

79பார்த்தது
தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் உள்ள தேசிய முதியோர் நலமருத்துவ மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதன்பின்னர் தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக உதவியாளர், டேட்டா என்ட்ரி, ஆபரேட்டர் உள்ளிட்ட 43 பேருக்கு பணி வழங்கினார்.

இதில் முதல்கட்டமாக 28 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார். இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது; கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 8. 64 ஏக்கர் பரப்பளவில் தேசிய நல வாழ்வு மருத்துவமனை தொடங்க வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் ஒரே முதியோர் நல மருத்துவமனை இதுதான். 200 படுக்கை வசதிகள், 40 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகள் உள்ளது.

தொடர்புடைய செய்தி