சென்னை: பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டங்கள்; முதல்வர் உறுதி

77பார்த்தது
சென்னை: பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டங்கள்; முதல்வர் உறுதி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் அரசு உறுதியாக உள்ளது என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, சமூக நீரோட்டத்தில் ஒருங்கிணைக்கும் விதமாக கல்வி, திறன் மேம்பாடு, வீட்டுவசதி, உட்கட்டமைப்பு போன்றவற்றுக்காக தனித்துவமான திட்டங்களை வகுத்தும், செயல்படுத்தியும் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கான திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளவும் இந்த அரசு உறுதியாக உள்ளது என முதல்வர் பேசினார்.

தொடர்புடைய செய்தி