எழும்பூர் மருத்துவமனையில் 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

83பார்த்தது
எழும்பூர் மருத்துவமனையில் 3 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரெமா சந்திரமோகன் வெளியிட்ட அறிக்கையில், எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சமீபத்தில் 3 முக்கியமான அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. செய்யாறு பகுதியை சேர்ந்த நிவாஸ் என்ற ஒரு வயது குழந்தையின் நெஞ்சுப்பகுதியில், உணவுக்குழாய் மற்றும் சுவாசக் குழாயை அழுத்திக்கொண்டு 4 செ. மீ அளவில் கட்டி இருந்துள்ளது.

பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடைசியாக மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை, பெற்றோர் அனுமதித்தனர். பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு, 3 மில்லி மீட்டர்அளவு கொண்ட நவீன கருவி மூலம், வாட்ஸ்-கீஹோல் உயர்தர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அந்த கட்டி அகற்றப்பட்டது.

ஆந்திராவை சேர்ந்த வெங்கட்மது என்ற 5 வயது குழந்தை வயிற்றுப் பகுதியில் மிகப்பெரிய கட்டி இருந்தது. பல மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று குணமாகாத நிலையில், எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் புற்றுநோய் கட்டி என தெரிந்தவுடன், ஒரு கிலோ எடை உள்ள கட்டியை அகற்றி, வயிற்று சுவர் மறு சீரமைப்பு செய்து குழந்தையை நலமாக வீட்டுக்கு அனுப்பிவைத்தோம்.

இதேபோல், வில்சன் நோயால் பாதிக்கப்பட்ட வேளச்சேரியைச் சேர்ந்த ரித்திக் என்ற 5 வயது சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிறுவனுக்கு தொடர் பிரச்சனைகள் இருந்ததால் அவருக்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் வீட்டுக்கு அனுப்பியதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி