பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்: ஆணையர் அறிவுரை

54பார்த்தது
பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்: ஆணையர் அறிவுரை
சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தனிக்கவனம் செலுத்தி கண்காணித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து இந்திய ஆட்சிப் பணி நிலையில் உள்ள மண்டல கண்காணிப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் குமரகுருபரன் தலைமையில் ரிப்பன் கட்டிட அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (அக் 1) நடந்தது.

கூட்டத்தில், ஆணையர் குமரகுருபரன் பேசியதாவது: வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீர் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தனிக்கவனம் செலுத்தி கண்காணித்திட வேண்டும். மழை நேரத்தில் மக்கள் தங்குவதற்காக தயார்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் மற்றும் அதற்கு தேவையான அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதில் மின்வசதி, குடிநீர் வசதி, ஜெனரேட்டர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள், அனைத்து அம்மா உணவகங்கள் என மக்களுக்கு தேவையான உணவினை சமைத்து வழங்குகின்ற வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி