தேனி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அமமுக நிர்வாகிகளின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில் சசிகலா கட்டுப்பாட்டில் அலுவலகம் உள்ளதால் கூட்டத்தை அங்கே நடத்தியதாக அமமுக தகவல் தெரிவித்துள்ளது. வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக மற்றும் அமமுகவின் கூட்டத்தை நடத்த உரிமை கோரிய நிலையில், காவல்துறை உத்தரவால் கடந்த 3 ஆண்டுகளில் அங்கு எவ்வித கூட்டம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.