ஓடையில் மூழ்கி 3 சிறார்கள் பலி

61பார்த்தது
ஓடையில் மூழ்கி 3 சிறார்கள் பலி
விழுப்புரம்: திண்டிவனம் கோனேரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள்கள் பிரியதர்ஷினி (11), சுபலட்சுமி (8), இவர்களது உறவினர் விஜயகுமார் மகன் சஞ்சய் (10) மூவரும் நேற்று மாலை நாவல் பழம் பறிப்பதற்காக ஓடை பகுதிக்கு சென்றனர். ஓடையில் ஒருவர் நீரில் மூழ்கியதை பார்த்த மற்ற இருவரும் அவரை காப்பாற்ற முயன்று, அடுத்தடுத்து நீரில் முழ்கினர். கிராம மக்கள் மூவரின் உடலை மீட்ட நிலையில், அவர்களை காப்பாற்ற முடியவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி