அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.. இருவர் காயம்

மதுரை தூத்துக்குடி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் காயமடைந்தனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுப்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் மகேஷ் குமார் (வயது 50 ) இவர் அருப்புக்கோட்டை ஏ டபிள்யூ பி எஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் அங்கீக அணி என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் மதுரை தூத்துக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மகேஷ் குமார் மற்றும் அங்கீக அணி ஆகிய இருவருமே காயமடைந்த நிலையில் பந்தல்குடி காவல் நிலைய பொழுதார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.