5 ஆவது ஆண்டு பவள விழா: திமுக உறுப்பினர்கள் கூட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் அருப்புக்கோட்டை நகர் மற்றும் வடக்கு ஒன்றிய திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் துறை அமைச்சரும் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ தலைமை தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் திமுக உருவாகி 75 ஆவது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு இல்லம் தோறும் திமுக கொடி பறக்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்திய நிலையில் அருப்புக்கோட்டையில் அனைத்து இல்லங்களிலும் திமுக கொடி ஏற்றுவோம், வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றுவோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், இதற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், நகர செயலாளர் மணி, முன்னாள் சேர்மன் சிவப்பிரகாசம் உள்ளிட்ட நகர ஒன்றிய மாவட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‌