ஆட்டோவில் இருந்து விழுந்தவர் பலி

மரக்காணம் அடுத்த அசப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 50; இவர் நேற்று காலை 10: 00 மணிக்கு கீழ்புத்துப்பட்டில் இருந்து ஆட்டோவில் மரக்காணத்திற்கு இ. சி. ஆர். , வழியாக வந்தார். கூனிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஆட்டோ டிரைவர் திடீரென பிரேக் போட்டர். அப்பொழுது பின்னால் அமர்ந்து வந்த கணேசன் கீழே விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.