சேலம் வந்த வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

மதுரை- பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று( ஆக.31) மாலை 05. 00 மணிக்கு சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. மீண்டும் பெங்களூரூ நோக்கி புறப்பட்ட வந்தே பாரத் ரயிலை பா. ஜ. க. வின் மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, சுற்றுச்சூழல் பிரிவின் மாநிலத் தலைவர் கோபிநாத், எம். எல். ஏ. க்கள் சரஸ்வதி, அருள் ஆகியோர் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.