இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு புது வீடு

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த சேலம் சிவதாபுரத்தை சேர்ந்த குப்புசாமியின் நினைவாக அவரது குடும்பத்தினருக்கு பா.ம.க. சார்பில் புதிதாக வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று(செப்.8) மாலை நடைபெற்றது. இதில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்து, அதன் சாவியை குப்புசாமியின் குடும்பத்தினரிடம் வழங்கினார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அருள் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.