மாட்டுவண்டி பந்தயத்தில் மோதல்; 2 பேர் படுகாயம்

புதுக்கோட்டை அருகே கத்தக்குறிச்சியில் சித்தி விநாயகர், அய்யனார் கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 30வது ஆண்டாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு மாடு என்று 3 பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. நடுமாடு பந்தயத்தின்போது முந்திச் செல்வது தொடர்பாக 2 மாட்டு வண்டியின் சாரதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பந்தயம் முடிந்ததும் 2 சாரதிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் பதட்டம் நிலவியதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.