எலிமருந்து கலந்த தண்ணீர்.. சிறுவன் பலி

32168பார்த்தது
எலிமருந்து கலந்த தண்ணீர்.. சிறுவன் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம், சொக்கன்குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராஜன். இவருக்கு ஒரு மகன் மற்றும் மக்கள் உள்ளனர். இதில் இளைய மகன் விக்னேஷ் (வயது 13) அருகில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் மாலை விளையாட சென்ற அவர் தாகத்துடன் வந்து வீட்டில் உள்ள குடத்தில் தண்ணீர் குதித்துள்ளார். இதனையடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது குடத்தில் இருந்த தண்ணீர் மட்டும்தன குடித்தேன் என கூறியுள்ளார். அதனை சோதித்து பார்த்ததில் எலிமருந்து பாக்கெட் கிடைத்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.