இராஜபாளையம் அருகே வெளி மாநில லாட்டரி விற்பனை செய்த நபர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வயின்ஸ் ஷாப் பார் முன்பாக வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை வைத்து விற்பனை செய்வதாக வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் அஜீத்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் சம்மந்தபுரத்தை சேர்ந்த ராகவன் என்பவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை செல்போன் மூலம் விற்பனை செய்வது தெரிய வந்தது.
மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போனை கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.