ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் ஒற்றைக்காட்டு யானையை!

64பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கீழ் முருங்கை பகுதியில் நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை வழியாக ஒற்றைக் கொம்பு காட்டு யானை ஒன்று திடீரென வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியுடன் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும் காவல்துறையினரும் வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர் திடீரென கீழ் முருங்கை வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் தஞ்சம் அடைந்ததால் அதை நேற்று இரவு முதல் தற்போது வரை விரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பிறகு கிருஷ்ணகிரி தர்மபுரி பகுதியை சேர்ந்த வேட்டை தடுப்பு வன காவலர்களை வர வைத்து தற்போது யானையை விரட்டும் பணியில் பட்டாசு வெடித்தும் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.