பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்

4478பார்த்தது
பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1100 கோடி செலவில் பன்னாட்டு விமான முனையம் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி நாளை காலை 10. 10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு செல்கிறார். அங்கு மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்குகிறார். இந்த விழாவில் முதல்வர் மு. க. ஸ்டாலின், கவர்னர் ஆர். என். ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து மதியம் 1. 15 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

தொடர்புடைய செய்தி