தூத்துக்குடி அருகே கார் மோதி பெண் பலி!

2639பார்த்தது
தூத்துக்குடி அருகே கார் மோதி பெண் பலி!
தூத்துக்குடி அருகே சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தூத்துக்குடி அருகிலுள்ள முக்காணி, பாரதி நகரைச் சேர்ந்தவர் முனியசாமி மனைவி ராஜலட்சுமி (40). இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலை முக்காணி ரவுண்டானா அருகே ரோட்டை கடந்து செல்ல முயன்றபோது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் இவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராஜலட்சுமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த தூத்துக்குடி பூபால்ராயர் புரத்தை சேர்ந்த அண்டோ (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி