டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் பெண் படுகாயம்

584பார்த்தது
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் காந்தி நகர், பத்ரகிரியார் தெருவில் வசிப்பவர் காந்திமதி, 48. கூலி வேலை. இவர் நேற்று முன்தினம் பிற்பகலில் கவுரி தியேட்டர் அருகே உள்ள மளிகை கடையில் சாமான்கள் வாங்க, தனது டி. வி. எஸ். எக்ஸல் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கனரா வங்கி ஏ.டி.எம். அருகே சென்றபோது பின்னால் வந்த கார், காந்திமதியின் டூவீலர் மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவர் குமாரபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 42, என்பவரை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you