அருவியில் மூழ்கிய குடும்பம்.. இருவர் பலி (வீடியோ)

68பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் புனே லோனாவலாவில் புஷி அணைஉள்ளது. அங்குள்ள நீர்வீழ்ச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் காணாமல் போயினர். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்தனர். தொடர்ந்து, நீர்வீழ்ச்சியில் சிக்கியவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் குழந்தைகள் உள்பட மூன்று பேர் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.