தொண்டாமுத்தூர் - Thondamuthur

வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி அந்த பெண்ணை பார்த்து சைகை காட்டி வந்துள்ளார். இதனை அந்த பெண் பல முறை எச்சரித்தும் அந்த வாலிபர் கேட்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் ( செப்டம்பர் 14) இரவு அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணை தொட்டு தகாத முறையில் நடக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரது மகன், மருமகள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அங்கு வந்தனர். அவர்களை மிரட்டிய அந்த வாலிபர் அனைவரையும் கீழே தள்ளி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அந்த பெண் ராமநாதபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் ராஜேஷ் (30) என்பவரை கைது செய்தனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా