ராதாகிருஷ்ணன் நகர் - Dr radhakrishnan nagar

சென்னை: சகமாணவர்கள் உருவகேலி.. மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை

சென்னை: சகமாணவர்கள் உருவகேலி.. மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை

சென்னையில், ராகிங் கொடுமையால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவன், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தேறி உள்ளது. சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கோபிநாத், நித்யா தம்பதியின் 17 வயதான மகன் கிஷோர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், பள்ளியில் சக மாணவர்கள் உருவகேலி செய்ததால் கிஷோர் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படும் நிலையில், வீட்டின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தனது தாயை தொலைப்பேசியில் அழைத்து, தன்னை மன்னித்துவிடுங்கள் எனக்கூறிவிட்டு செல்போனை துண்டித்தது தெரியவந்துள்ளது. உருவகேலி செய்வது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை
சென்னை: ஊழல்களே பாஜக கூட்டணிக்கு ஊன்றுகோல்; அமைச்சர் ரகுபதி
Apr 10, 2025, 16:04 IST/ஆயிரம் விளக்கு
ஆயிரம் விளக்கு

சென்னை: ஊழல்களே பாஜக கூட்டணிக்கு ஊன்றுகோல்; அமைச்சர் ரகுபதி

Apr 10, 2025, 16:04 IST
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த ஊழல்கள், ரெய்டுகள், சிபிஐ விசாரணைகள், அமலாக்கத் துறை சோதனைகள் எல்லாமே நாடகம்தான். எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பணிய வைக்கத்தான் அவை பயன்படுத்தப்பட்டன என்று அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது" எனப் பொய்யைச் சொல்லியிருக்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா.  "ஊழலை ஒழிக்கிறேன்" என ஆட்சியில் அமர்ந்த பிரதமர் மோடி என்ன செய்தார்? எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கே 'ஊழல் புகார்' என்ற கேடயத்தைப் பயன்படுத்தினார். மோடி பேசிய 'அச்சா தின்' (நல்ல நாள்) எல்லாம் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்குத்தான், அவர்களின் வளர்ச்சிக்குத்தான் 'வளர்ச்சி நாயகன்' உழைத்தார். அவையெல்லாம் முறைப்படுத்தப்பட்ட ஊழல்கள்தான். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த ஊழல்கள், ரெய்டுகள், சிபிஐ விசாரணைகள், அமலாக்கத் துறை சோதனைகள் எல்லாமே நாடகம்தான்.  எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பணிய வைக்கத்தான் அவை பயன்படுத்தப்பட்டன. ஊழல் புகார்களை வைத்து கூட்டணி பேரம் இன்று வரை நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாஜகவின் கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன என அவர் சாடியுள்ளார்.