ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் யூடியூபர் ஹேமாத்ரி. இவர் சமூக ஊடகங்கள் மூலம் இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்களுடன் அறிமுகமாகி நெருங்கி பழகி புகைப்படங்களை எடுப்பது வழக்கம். சில நாட்களுக்குப் பிறகு போட்டோவை வைத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்ததில் நடந்த விசாரணையில் ஹேமாத்ரி பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து ஹேமாத்ரியை போலீசார் கைது செய்துள்ளனர்.