டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாட்டின் போது, போராட்டத்தில் ஈடுபட்ட 10 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்திய நலன்களுக்கு எதிராக சமரசம் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டி, இளைஞர் காங்கிரஸ் இந்த போராட்டத்தை நடத்தியது. விவசாயிகளின் நலன்கள், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து அவர்கள் கவலை தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் மாநாட்டு அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.