ஐதராபாத்: நித்யா (30) என்ற பட்டதாரி இளைஞர் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய இளம்பெண்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது தனது செல்போனில் இளம்பெண்களை நிர்வாண வீடியோ எடுத்துள்ளார். அதனை காட்டி லட்சக்கணக்கில் பணத்தையும் பறித்துள்ளார். இதையடுத்து, போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நித்யா கைது செய்யப்பட்டார்.