மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு முழு ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இதுகுறித்து அரசு உரிய ஆலோசனை நடத்தலாம் என கருத்து தெரிவித்துள்ளது. பெண்களின் உடல்நலம் மற்றும் தேவைகளை கருத்தில் கொள்வது மிகவும் அவசியம் என்றும், அனைத்து தரப்பு பெண்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த கொள்கையை அரசு உருவாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
நன்றி: Newstamil24x7