மன உளைச்சல் மற்றும் பணிச்சுமை காரணமாக அதிக சம்பளம் தரும் ஐடி வேலையை விட்டுவிட்டு, கேரளப் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநராக மாறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 9 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், தற்போதைய பணி தனக்கு சுதந்திரத்தையும் நிம்மதியையும் தருவதாகக் கூறியுள்ளார். இதன் மூலம் மாதம் ரூ.60,000 வரை ஈட்டும் அவர், பணத்தை விட மன அமைதியே முக்கியம் என நெகிழ்ந்துள்ளார்.