விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில், தணிக்கை வாரியத்தின் மேல்முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப இன்று (ஜன.27) உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஜன.9-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் படத்தின் ரிலீஸ் மேலும் சில நாட்கள் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
நன்றி:NewsTamil24/7