ஊருக்குள் புகுந்த காட்டு யானை...நூழிலையில் உயிர் தப்பிய சிறுவன் (Video)

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விவசாய தோட்டத்தில் உலாவரும் யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்து வருவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஓசூரின் கெலமங்கலத்தில் நேற்று (டிச. 30) ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானை அங்கிருந்தவர்களை துரத்தியபோது ஒரு சிறுவன் பதற்றத்தில் தடுமாறி கீழே விழுந்து, பின்னர் மீண்டும் எழுந்து ஓடி யானையிடமிருந்து தப்பித்தான். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி