ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவு என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், பதவிக்குரிய மாண்பை மறந்து கண்ணியக்குறைவான கருத்துக்களை பொதுஅவையில் வைத்திருக்க வேண்டியதில்லை. அதே வேளையில் தவெக அரசின் கைது நடவடிக்கையும் ஏற்புடையதல்ல என கூறியுள்ளார். மேலும், காவிரி பிரச்னையில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு CM விஜய் காட்டுவது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.