கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அழகிய நகரமான மைசூரு, அதன் பிரம்மாண்டமான அரண்மனைகளுக்கும் செழுமையான கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது. ஆனால், இந்நகரத்திற்குப் பலரும் அறியாத மற்றொரு சிறப்பான அடையாளமும் உண்டு. கொடி தயாரிப்புடன் அது கொண்டுள்ள வலுவான தொடர்பினாலும், அதன் வரலாற்று முக்கியத்துவத்தினாலும் மைசூரு 'கொடிகளின நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தேசியக் கொடியை உருவாக்கப் பயன்படும் காதித் துணியைத் தயாரிப்பதில் மைசூரு நீண்டகால மரபைக் கொண்டுள்ளது.