இந்தியப் பெருநிலப்பரப்பில் தென்மேற்குப் பருவமழையை முதன்முதலில் பெறும் நகரம், கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரமாகும். எனினும், இந்தியாவின் தீவுப் பகுதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பருவமழையை இன்னும் முன்னதாகவே பெறுகின்றன. வழக்கமாக மே 22-ஆம் தேதியையொட்டி அதாவது பருவமழை கேரளத்தை வந்தடைவதற்குச் சில நாட்களுக்கு முன்பே அங்கு மழை பொழியும் எனப்படுகிறது.