டெல்லியில் குண்டுகளை வெடிக்க வைக்கும் முன்பாக செங்கோட்டை பார்க்கிங்கில் உமர் நபி என்ன செய்தார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று (நவ.10) பகல் 3.19 முதல் 6.22 வரை காரை செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் உமர் நபி நிறுத்தியுள்ளார். அந்த 3 மணி நேரத்தில் உமர் நபி, யாரையேனும் சந்தித்தாரா?, அல்லது உளவு பார்த்தாரா? அந்த நேரத்தில் உமர் நபியை யாரேனும் தொடர்பு கொண்டு தகவல் பரிமாறினார்களா என விசாரணை நடந்து வருகிறது.