விலங்குகளின் கண்கள் இரவில் ஒளிர்வதற்கு காரணம் என்ன?

பல விலங்குகளின் கண்களில் “Tapetum lucidum” எனப்படும் சிறப்பு பிரதிபலிப்பு சவ்வு காணப்படுகிறது. தமிழில் இதை “ஒளியின் நாடா” என அழைக்கலாம். இது விழித்திரைக்கு பின்னால் அமைந்து, இரவில் நிலவொளி அல்லது நட்சத்திர ஒளி போன்ற மங்கிய ஒளிக்கதிர்கள் கண்ணுக்குள் நுழையும் போது அவற்றை மீண்டும் பிரதிபலித்து விழித்திரைக்கு அனுப்புகிறது. இதனால் குறைந்த ஒளியிலும் விலங்குகள் தெளிவாக பார்க்கும் திறன் அதிகரிக்கிறது.

தொடர்புடைய செய்தி