அண்ணாமலை கூறியது பொய்.. TN Fact Check விளக்கம்

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கும் 56 லட்சம் மாணவர்களில் குறைந்தது 30 லட்சம் பேர் மும்மொழி கற்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதற்கு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த தனியார் பள்ளிகள் சுமார்: 12,690. CBSE பள்ளிகள் வெறும்: 1,835. CBSE பள்ளிகள் தவிரக் கட்டாய இந்தி பாடம் எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் வெறும் 3.16 % பள்ளிகளில் மட்டுமே இந்தி கட்டாயமாக உள்ளது. எனவே தப்புக் கணக்கை உருவாக்கி பேசுவது தவறு என தகவல் சரிபார்ப்பகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி