மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் ஆகிய படங்களை இயக்கி வழங்கிய விக்ரம் சுகுமாரன் நேற்று (ஜூன் 1) திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவு திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மதயானைக்கூட்டத்தின் படப்பிடிப்பில் இயக்குனரான விக்ரம் கதாபாத்திரங்களிடம் ஒரு காட்சியை விவரித்து, அங்குள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.