கோவையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆறுதல் கூறினர். தொடர்ந்து, அவர்களிடம் பேசிய அவர், “இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது, விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதில் பாஜக உறுதியோடு இருக்கும்” என்றார்.