கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி கொல்கத்தாவில் பங்கேற்ற கூட்டத்தில் நடந்த அசம்பாவிதத்திற்கும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கும் (AIFF) எந்தத் தொடர்பும் இல்லை என்று அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது கொல்கத்தாவில் மக்கள் தொடர்பு நிறுவனம் ஏற்பாடு செய்த ஒரு தனிப்பட்ட நிகழ்வு என்றும், நிகழ்வின் விவரங்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை அல்லது அனுமதி கோரப்படவில்லை என்றும் கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.