சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் அதிக கோயில்கள் உள்ளன. அதற்கு காரணம், நாம் கோயில்களை வைத்து கலை வளர்த்தோம், கலவரத்தை வளர்க்கவில்லை. பண்பாட்டை வளர்த்தோம், பாகுபாட்டை வளர்க்கவில்லை. கடவுளை கோயில் வைத்து வணங்கலாம், பிரச்சாரத்திற்கு அழைக்காதீர்கள். இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும்” என்றார்.